29 May 2015

இன்றைய விஷயம்: 29-05-2015

தமிழ் சினிமாவில் மூன்று வேடங்கள்... !

தமிழ்ப் படங்களில், கதாநாயகர்கள் மூன்று வேடங்களில் நடித்த படங்கள் சில உன்டு. அதுமாதிரியான படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

இரண்டு வேடங்களோ, நான்கோ அதற்கு மேற்பட்ட வேடங்களோ  இல்லை. அதே சமயம் , நாகேஷ் பணக்காரக் குடும்பம் படத்திலும், வடிவேலு மனதைத் திருடிவிட்டாய் படத்திலும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் முன்று வேடங்களில் வருவார்கள். இவைகள் போன்ற படங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

ரெடி... ஜுட்... !!!

1.   பரங்கிமலையா... பல்லாவரமா... நடுவிலா... ?
 
2.   பொம்மையை நிஜமென்று காட்டியதால்... நிஜம் பொம்மைபோல் தோற்றது.
 
3.   மூன்று சிரம்... அதிலும் ஒன்று பரதமா... ! ரொம்ப சிரமம்... !!
 
4.   ஊர் ஊராய்ப் போவான்... காவலனும் அவனே... கார் சீர் நிபுணனும் அவனே...
 
5.   கேப்டனாய் இருந்தும் கேப்டனாய் இல்லாதவர் நாயகனாக நினைத்தது சரியா... ?
 
6.   புயல், மேல் உலகில் மையம் கொள்ளும் என்று எதிர்பார்த்தால்... இப்படி புஸ்ஸுன்னு  ஆயிடுச்சே...
 
7.   RED LOTUSம், ரத்தக்கல்லும் சேர்ந்த சிறப்பான படம்... ஏகாம்பரம்ம்ம்ம்...!!!
 
8.   இது இவர் படம்னா இவரே நம்பமாட்டார்... இல்லையா ‘நேர்மை மன்னரே’... ?
 
9.   சாமிப்புள்ளையாக... நடிகரா... திலகமா... !
 
10.இவர் கேரக்டரை இவரே புரிஞ்சிக்கலையே... இதுல எடிசன் என்ன... பூ என்ன?


நீங்களும் முயற்சிக்கலாமே...
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...