16 November 2006

இன்றைய விஷயம் : 16-11-2006 – இந்தப் பொருள் எந்தப் படத்தில் வரும்…



ஒரு பொருளைப் பற்றிய சிறுகுறிப்பு (சிறுகவிதை) தரப்படும். அந்தப் பொருளைக் கண்டுபிடித்து, எந்தப் படத்தில் அது நினைவில் நிற்கும் வகையில் வந்தது எனக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. குளிருக்கு இதம்
காதலுக்கு அடையாளம்
கண்டுபிடி என்ன அது… ?

2. அச்சடித்த காகிதமோ நிலைக்குது…
ஆறடியில் மனிதனையும் குலைக்குது…

3. பொய்யாய்க் கண் சிமிட்டும்…
பொற்பாதம் அடி வைத்து நடக்கும்…

4. பருவம் எழுதிய
மூன்றாம் புருவம்…

5. பச்சை நிறமே… உன்னை
அசோகர் நட…
அரசாங்கம் எடுக்கிறதே… !

6. போகும் இடமெல்லாம்…
பேச்சுத் துணையாய்க் கூட வரும்
நவ நாகரீகத் தோழி…

7. எலும்புக்கூடு (நேரடிக் குறிப்பு)

8. கண்ணுக்கு அழகு…
கலைஞருக்கும் அழகு…

9. நீ அழைத்தால்… நான்
எங்கிருந்தாலும் ஓடி வந்து…
உடனே நிற்பேன்…

10. விரலில் ஒன்று இந்தப் பெயரோடு உண்டு…
முன்னே சேர்த்திடு ‘ஓம்’ என்ற வார்த்தை…

11. முதுமைக்கு இது அழகு…

12. பழவகை ஒன்று
பாவம் முடிவாய்…
வந்தது கூடையோடு…

13. இசைப்பெட்டி… கொஞ்சம் பெருசு…

14. மாங்கா மச்சம்… (நேரடிக் குறிப்பு)

15. ‘அஞ்சாம் நம்பர் சன்னதி தெரு திருவல்லிக்கேணி’ என்று பின்பக்கம் எழுதப்பட்ட போட்டோ… (நேரடிக் குறிப்பு)


நீங்களும் முயற்சிக்கலாமே…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/16-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


13 November 2006

இன்றைய விஷயம் : 13-11-2006 - கொஞ்சம் கவனிக்கவும்...



ஒரு கதாபாத்திரம், அதே கதாபாத்திரப் பெயர் கொண்ட ஒரு தொழில்நுட்பக் கலைஞரின் பெயர், மற்றும், அந்தத் தொழில் நுட்பக் கலைஞரோடு தொடர்புள்ள படத்தைப் (படங்களைப்) பற்றிய குறிப்பு.

இன்னும் விளக்குகிறேன். முதல் குறிப்பு - ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம், இரண்டாவது குறிப்பு - அதே கதாபாத்திரப் பெயர் கொண்ட ஒரு தொழில்நுட்பக் கலைஞர், மூன்றாவது குறிப்பு - அந்தத் தொழில்நுட்பக் கலைஞர் பணிபுரிந்த படம் அல்லது படங்கள் பற்றிய செய்தி. இதில் முதல் குறிப்பிற்கும், மூன்றாவது குறிப்பிற்கும் சம்பந்தமே இல்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது குறிப்புகளுக்குத் தொடர்பு உண்டு.

முடிந்தால் அந்தத் தொழில்நுட்பக் கலைஞரின் பெயரைக் (Infact, அந்தக் கதாபாத்திரப் பெயரும் அதேதான்) கண்டுபிடியுங்கள்…

1. ஒரு கல்லூரி இளைஞர் (விலாசம் தவறிக் காதலித்தும் பார்ப்பார்), ஒரு இயக்குனர் – காதலைப் பற்றிய படங்களை மட்டுமே எடுப்பார்.

2. ஆசாரமான குடும்பத்தில் படத்தில் (நகைச்சுவை) ஒரு பொறுப்பில்லாத இளைஞர், ஒரு ஒளிப்பதிவாளர் – இரண்டு, மூன்று படங்களை இவர் இயக்கியும் உள்ளார்.

3. மிகப்பெரிய படத்தில் வில்லன், ஒரு படத்தொகுப்பாளர் – இன்றைய இளைஞர்களின் Choice இவர்தான்.

4.ஓர் வித்தியாசமான இரட்டை வேடப் படத்தில் ஒருவர், ஒரு இசையமைப்பாளர் (சுமாராகப் பிரபலம்) – மெலடி பாடல்களின் தற்கால மன்னர்.

5. ஒரு வக்கீல் (இரட்டை வேடத்தில் ஒன்று), ஒரு நடிகர் – கிட்டத்தட்ட மிகப் பெரிய மனிதர்.

6. பஸ்ஸோடு தொடர்புள்ள படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவர், நடன இயக்குனர் – ஏறக்குறைய எல்லா கதாநாயகர்களோடும் பணிபுரிந்தவர்.

7. சூப்பர் ஹிட் படத்தின் நாயகன், சூப்பர் தயாரிப்பாளர் – நீண்ட நாள் கம்பெனி. (This one is a bit misguiding… )

8. தெலுங்கில் இருந்து வந்த படத்தின் நாயகி, ஒரு பிண்ணணிப் பாடகி – மெல்லிசை யுவராணி.

9. நகைச்சுவைக்கு இலக்கணமான படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவர், நடிகர் / இயக்குனர் – பல வெற்றிப் படங்களை எடுத்தவர்.

10. காதலை வித்தியாசமாகச் சொன்ன படத்தின் நாயகர், இசை அமைப்பாளர் (கள்) – ஒரு காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.


நீங்களும் முயற்சிக்கலாமே…


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/13-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…