24 November 2006

இன்றைய விஷயம் : 24-11-2006 – இந்த ஹீரோ எந்தப் படம் ?


ஹீரோவின் கதாபாத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. படத்தின் பெயரைக் கண்டிபிடியுங்கள் பார்க்கலாம்.


1. இந்து
2. மெட்ராஸ்
3. சாம்ராஜ்
4. பாலுத்தேவர்
5. பட்டாசு
6. மல்லி
7. நாகராஜசோழன் M.A. M.L.A
8. டைகர்
9. பர்மா
10. மதனகோபால் (மைக்கேல் மதன காமராஜன் இல்லை)



விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/24-11-2006.html) சொடுக்கவும்...


மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…


22 November 2006

இன்றைய விஷயம் : 22-11-2006 – இந்த வரிசையில் சேராதது என்ன ?



வரிசையில் நான்கு படங்கள் தரப்பட்டுள்ளன. அதில் மூன்று படங்களில் ஒரு ஒற்றுமை உண்டு. நான்காவது படத்தில் அந்த ஒற்றுமை இல்லை. அது என்ன படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். (கேள்விகளிலேயே ஒரு ஒற்றுமை இருப்பதையும் நீங்கள் காணலாம்.)

ஒரு முக்கியக் குறிப்பு : ஒரே ஒற்றுமை இரண்டு வரிசைகளுக்கு இல்லை…


Find the ODD MAN out… ?


1. ஜென்டில்மேன், காதலன், சக்தி, ஸ்டார்

2. ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ்

3. ஜென்டில்மேன், முதல்வன், அந்நியன், பாய்ஸ்

4. ஜென்டில்மேன், வானமே எல்லை, ரோஜா, பாஞ்சாலங்குறிச்சி

5. ஜென்டில்மேன், நேசம், வின்னர், இந்தியன்

6. ஜென்டில்மேன், முதல்வன், ஜெய்ஹிந்த், வாத்தியார்

7. ஜென்டில்மேன், காதலுக்கு மரியாதை, லவ்டுடே, கோல்மால்

8. ஜென்டில்மேன், ஆய்த எழுத்து, திருடா திருடா, வண்டிச்சோலை சின்னராசு

9. ஜென்டில்மேன், பாட்ஷா, வீரா, அண்ணாமலை

10. ஜென்டில்மேன், பம்மல் K. சம்மந்தம், காதலன், அந்நியன்



விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/22-11-2006.html) சொடுக்கவும்...

நீங்களும் முயற்சிக்கலாமே… !


மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…




16 November 2006

இன்றைய விஷயம் : 16-11-2006 – இந்தப் பொருள் எந்தப் படத்தில் வரும்…



ஒரு பொருளைப் பற்றிய சிறுகுறிப்பு (சிறுகவிதை) தரப்படும். அந்தப் பொருளைக் கண்டுபிடித்து, எந்தப் படத்தில் அது நினைவில் நிற்கும் வகையில் வந்தது எனக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. குளிருக்கு இதம்
காதலுக்கு அடையாளம்
கண்டுபிடி என்ன அது… ?

2. அச்சடித்த காகிதமோ நிலைக்குது…
ஆறடியில் மனிதனையும் குலைக்குது…

3. பொய்யாய்க் கண் சிமிட்டும்…
பொற்பாதம் அடி வைத்து நடக்கும்…

4. பருவம் எழுதிய
மூன்றாம் புருவம்…

5. பச்சை நிறமே… உன்னை
அசோகர் நட…
அரசாங்கம் எடுக்கிறதே… !

6. போகும் இடமெல்லாம்…
பேச்சுத் துணையாய்க் கூட வரும்
நவ நாகரீகத் தோழி…

7. எலும்புக்கூடு (நேரடிக் குறிப்பு)

8. கண்ணுக்கு அழகு…
கலைஞருக்கும் அழகு…

9. நீ அழைத்தால்… நான்
எங்கிருந்தாலும் ஓடி வந்து…
உடனே நிற்பேன்…

10. விரலில் ஒன்று இந்தப் பெயரோடு உண்டு…
முன்னே சேர்த்திடு ‘ஓம்’ என்ற வார்த்தை…

11. முதுமைக்கு இது அழகு…

12. பழவகை ஒன்று
பாவம் முடிவாய்…
வந்தது கூடையோடு…

13. இசைப்பெட்டி… கொஞ்சம் பெருசு…

14. மாங்கா மச்சம்… (நேரடிக் குறிப்பு)

15. ‘அஞ்சாம் நம்பர் சன்னதி தெரு திருவல்லிக்கேணி’ என்று பின்பக்கம் எழுதப்பட்ட போட்டோ… (நேரடிக் குறிப்பு)


நீங்களும் முயற்சிக்கலாமே…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/16-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


13 November 2006

இன்றைய விஷயம் : 13-11-2006 - கொஞ்சம் கவனிக்கவும்...



ஒரு கதாபாத்திரம், அதே கதாபாத்திரப் பெயர் கொண்ட ஒரு தொழில்நுட்பக் கலைஞரின் பெயர், மற்றும், அந்தத் தொழில் நுட்பக் கலைஞரோடு தொடர்புள்ள படத்தைப் (படங்களைப்) பற்றிய குறிப்பு.

இன்னும் விளக்குகிறேன். முதல் குறிப்பு - ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம், இரண்டாவது குறிப்பு - அதே கதாபாத்திரப் பெயர் கொண்ட ஒரு தொழில்நுட்பக் கலைஞர், மூன்றாவது குறிப்பு - அந்தத் தொழில்நுட்பக் கலைஞர் பணிபுரிந்த படம் அல்லது படங்கள் பற்றிய செய்தி. இதில் முதல் குறிப்பிற்கும், மூன்றாவது குறிப்பிற்கும் சம்பந்தமே இல்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது குறிப்புகளுக்குத் தொடர்பு உண்டு.

முடிந்தால் அந்தத் தொழில்நுட்பக் கலைஞரின் பெயரைக் (Infact, அந்தக் கதாபாத்திரப் பெயரும் அதேதான்) கண்டுபிடியுங்கள்…

1. ஒரு கல்லூரி இளைஞர் (விலாசம் தவறிக் காதலித்தும் பார்ப்பார்), ஒரு இயக்குனர் – காதலைப் பற்றிய படங்களை மட்டுமே எடுப்பார்.

2. ஆசாரமான குடும்பத்தில் படத்தில் (நகைச்சுவை) ஒரு பொறுப்பில்லாத இளைஞர், ஒரு ஒளிப்பதிவாளர் – இரண்டு, மூன்று படங்களை இவர் இயக்கியும் உள்ளார்.

3. மிகப்பெரிய படத்தில் வில்லன், ஒரு படத்தொகுப்பாளர் – இன்றைய இளைஞர்களின் Choice இவர்தான்.

4.ஓர் வித்தியாசமான இரட்டை வேடப் படத்தில் ஒருவர், ஒரு இசையமைப்பாளர் (சுமாராகப் பிரபலம்) – மெலடி பாடல்களின் தற்கால மன்னர்.

5. ஒரு வக்கீல் (இரட்டை வேடத்தில் ஒன்று), ஒரு நடிகர் – கிட்டத்தட்ட மிகப் பெரிய மனிதர்.

6. பஸ்ஸோடு தொடர்புள்ள படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவர், நடன இயக்குனர் – ஏறக்குறைய எல்லா கதாநாயகர்களோடும் பணிபுரிந்தவர்.

7. சூப்பர் ஹிட் படத்தின் நாயகன், சூப்பர் தயாரிப்பாளர் – நீண்ட நாள் கம்பெனி. (This one is a bit misguiding… )

8. தெலுங்கில் இருந்து வந்த படத்தின் நாயகி, ஒரு பிண்ணணிப் பாடகி – மெல்லிசை யுவராணி.

9. நகைச்சுவைக்கு இலக்கணமான படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவர், நடிகர் / இயக்குனர் – பல வெற்றிப் படங்களை எடுத்தவர்.

10. காதலை வித்தியாசமாகச் சொன்ன படத்தின் நாயகர், இசை அமைப்பாளர் (கள்) – ஒரு காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.


நீங்களும் முயற்சிக்கலாமே…


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/13-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

10 November 2006

இன்றைய விஷயம் : 10-11-2006 – ஒரு விடுகதை – ஒரு படம்.



படத்தின் பெயர் ஒரு சிறிய விடுகதையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. முடிந்தால் கண்டிபிடியுங்கள்.

1. நகைச்சுவைப் பழைய படத்தில் நன்றாகச் செய்தாய் நடிகையே… !

2. மலரே… ! தளபதி நடிகர் தனக்கென இல்லாமல் இருந்தாரே… ! திருப்புமுனை…

3. உலகெல்லாம் ஒரு சொல். ஒரு சொல்லில் உலகம்.

இது வார்த்தை அல்ல. வாக்கியம். நிறைய புதுசு.

4. திசையின் முகப்பு, நவரசம் கொண்டது. வெள்ளி விழாப் படம்.

5. பேசாத இசை. பிச்சிக்கிட்டு ஓடிச்சு…

6. மனமே… ! பாசம், நேசம் எல்லாம் இல்லை… பணமே பகவான்… !! புரிஞ்சிக்கோ…

7. இரு மனங்களின் இணைப்பில் இமயம் வரைந்த சித்திரம். செம பாடல்கள்…

8. சொல்லித்தருபவனும், சொல்லிக்கொள்பவனும் சேர்ந்தால் நகைச்சுவைதான்.

9. தேர்தல் நேரத்தில் வேட்பாளர் சொல்வார்,

“என்னை வெளியாளா நினைக்காதீங்க… நான்… “

10. சமையல்காரனும், அவன் மனைவியும்… படத்தின் பெயர்தாங்க… !


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/10-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


08 November 2006

இன்றைய விஷயம் : 07-11-2006 – இந்த இடைவேளைக் காட்சி எந்தப் படத்தில் வரும்.


1. மொட்டை மாடியில் ஹீரோவும், ஹீரோயினும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலைச் சொல்லாமல் சண்டை போட்டுக் கொள்ளும் இடம்.

2. தன்னை எதிர்த்த ஹீரோவை, போலீஸ் வில்லன், அடித்துத் தண்டவாளத்தில் போடும் இடம் (ஹீரோ கஷ்டப்பட்டுத் தப்பித்துவிடுவார்)

3. ஹீரோயினைப் பற்றித் தப்பாகப் பேசியதால், தன் உயிர் நண்பர்களை ஹீரோ அடித்து, அதற்காக வருத்தப்படும் இடம்.

4. தன்னைப் பலமுறை அவமானப்படுத்திய ஹீரோயினின் கழுத்தில் ஹீரோ, பஞ்சாயத்தார் முன்னிலையில் தாலி கட்டும் இடம்.

5. தீவிரவாதி வில்லனைக் கொல்ல, ஹீரோவும் – அவர் படையும் கப்பலில் கிளம்பும்போது, புதிதாக இரண்டு பேர் வரும் இடம். (இடைவேளைக்குப் பிறகு அந்த இருவர் ஹீரோயினும், காமெடியனும் என்று தெரிந்து போகும்)

6. ஹீரோயினைக் கொல்லப்போவதாக, வில்லன், தன் அண்ணனைக் கொன்ற போலிஸ் ஹீரோவை, ஃபோனில் மிரட்டும் இடம்.

7. திருட்டுக் கல்யாணம் செய்து வரும் வழியில், இளம் ஜோடி, போலிஸ் வசம் சிக்கும் இடம்.

8. தான் காதலில் அவமானப்பட்டதையும் மறந்து, தன் பெற்றோர்களைக் கொன்றவர்களைப் பழிவாங்க, ஹீரோ (இருவரில் ஒருவர்) சபதம் செய்யும் இடம்.

9. பல பொய்கள் சொல்லிக் காதல் செய்யும் ஹீரோ, தன் நண்பர்களிடம் ஒரு கட்டத்தில், ‘இப்ப என்னடா பண்றது… பேசாம இண்டர்வல் விட்டுறலாமா… ?’ என்று கேட்கும் இடம்.

10. எட்டு வருடத்திற்கு முன்னால் இறந்ததாக நினைத்த ஹீரோ, உயிரோடு இருப்பது மட்டுமின்றி, தன் மகனின் மரணத்திற்கும் காரணம் அவனே என்று தெரியவரும்போது, வில்லன் அலறும் இடம்.

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/07-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

02 November 2006

இன்றைய விஷயம் : 02-11-2006 – இந்த வரிசையில் அடுத்தது என்ன… ?


தரப்பட்ட வரிசையில் அடுத்து இடம் பெறக்கூடியது என்ன என்று (நிச்சயமாக

இரண்டில் ஒன்றுதான்) கண்டுபிடியுங்கள்.


அதாவது, கொடுக்கப்பட்டுள்ள வரிசையில் உள்ள ஒற்றுமையைக் முதலில் தெரிந்து

கொண்டு, அதன்பின் இதே வரிசையில் அடுத்ததாக வரக்கூடியது எது என்று பதில்

சொல்லுங்கள்.


ரெடி… ஜூட்… What is next in the sequence… ?


1. சுசீலா, ஸ்ருதி, ஐஸ்வர்யா – மஞ்சுளா or மதுமிதா

2. சுரேஷ் கிருஷ்ணா, K.S. ரவிகுமார், சுந்தர். C – சுரேஷ் கிருஷ்ணா or K.S. ரவிகுமார்

3. ஜீன்ஸ், அமைதிப்படை, நாயகன் – பூவெல்லாம் உன் வாசம் or தீனா

4. ஜீவா, மீண்டும் ஒரு காதல் கதை, வெற்றி விழா – அன்பே சிவம் or ஆத்மா

5. மிருதங்க சக்கரவர்த்தி, கோவை பிரதர்ஸ், சாந்தி எனது சாந்தி – பார்த்தால் பசி தீரும் or பாடும் வானம்பாடி

6. உருவங்கள் மாறலாம், மகளிர் மட்டும், பொய்க்கால் குதிரை – நினைத்தாலே இனிக்கும் or பார்த்தாலே பரவசம்

7. இந்தியன், மனிதன் மாறிவிட்டான், அட்டகாசம் – மந்திரப் புன்னகை or பூவிழி வாசலிலே

8. வில்லாதி வில்லன், நான் மகான் அல்ல, தமிழன் – நல்லவன் or நான் சிகப்பு மனிதன்

9. ஊட்டி வரை உறவு, திருவிளையாடல், எதிரொலி – ஒன்ஸ்மோர் or முதல் மரியாதை

10. பாசப் பறவைகள், மாயாவி, அபூர்வ ராகங்கள் – விதி or விண்ணுக்கும் மண்ணுக்கும்


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/02-11-2006.html) சொடுக்கவும்...


மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…



31 October 2006

இன்றைய விஷயம் - 31-10-2006 : ஒரு பெயர் – ஒரு படம்


ஒரே ஒரு கதாபாத்திரப் பெயர் தரப்படும். முடிந்தால் படத்தைக் (தமிழ்ப் படம்) கண்டுபிடியுங்கள்.

1. வெள்ளிக்கிழமை ராமசாமி.

2. மவுண்ட்பேட்டன் மகாதேவன். (Tough One… ! )

3. காக்கர்லா சத்தியநாராயணா

4. பாலையா

5. அவினாசி

6. செல்லப்பா

7. D.S.P. தீனதயாளன்

8. வால்பாறை வரதன்

9. கஜா.

10. எழுத்தாளர் பைரவன்

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/31-10-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…

25 October 2006

இன்றைய விஷயம் - 25-10-2006 : இந்த வரிகள் எந்தப் பாடலில் வரும்…



1. ஒரு நாள் போவார்… ஒரு நாள் வருவார்… ஒவ்வொரு நாளும் துயரம்…

2. வெத்தலய மடிச்சு, மாமன் அத கடிச்சு… துப்ப ஒரு இடமில்லையே…

3. நீரோட்டம் போல் எந்தன் ஆட்டம்…

4. உன் நாணம் ஒருமுறை, விடுமுறை எடுத்தால் என்ன… ?

5. நேரம் கூடி வந்த வேளை… நீ நெஞ்சை மூடி வைத்த கோழை…

6. எந்தனது கல்லறையில்… வேறொருவன் தூங்குவதா… ? விதி என்பதா… ? சதி என்பதா… ?

7. ஆரவாரப் பேய்களெல்லாம் ஓய்ந்து விட்டதடா…

8. ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே… அய்யா உன்னை நெனச்சேனே… !

9. சுற்றும் உலகின் விட்டம் தெரியும்… சூரியன் பூமி தூரம் தெரியும்…

10. அரண்மனைய விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு…


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/25-10-2006.html) சொடுக்கவும்...



மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்

18 October 2006

18-10-2006 - இன்றைய விஷயம் : மூன்று வார்த்தைகள் - ஒரு படம்.


ஒரு படத்தைப் பற்றிய மூன்று வார்த்தைகள் / குறிப்புகள் தரப்படும்.

அது, படத்தில் வந்த வசனமாகவோ, கதாபாத்திரங்களின் பெயர்களோவோ, பாடல் வரிகளாகவோ, படக்குழுவினரில் யாருடைய பெயராகவோ அல்லது அந்தப் படம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு விஷயமாகவும் இருக்கலாம்.

ரெடி… !

1. முருகன், ஐஸ்வர்யா, ஜிகர்தண்டா.


2. தியாகு, ஸ்ரேயா ரெட்டி, நாசர்.

3. மணிபாரதி, கோவா, ஜாலி,

4. அருணாசலம், பழனி, பாகி

5. ஜில், ஜங், ஜக்

6. தங்கமணி, அஷோக், கௌதம்

7. கேசவா, BYE… !, இந்திரன்

8. சந்தியா, All-In-All, காமிரா

9. திருமுல்லைவாயல், கிருஷ்ணஸ்வாமி, Bio-gas

10. அகூந்பதம், கபீம்குபாம், மிருகினஜம்போ


விடைகள் அடுத்த சந்திப்பில்… (நீங்களும் முயற்சிக்கலாம்… ) சென்ற முறை கேள்விகளுக்கான விடைகள் இதோ…

1. கட்டுமரக்காரன்

2. நானே வருவேன்

3. கிழக்காப்பிரிகாவில் ராஜு

4. சார்லி

5. பார்த்திபன், K. S. ரவிக்குமார்

6. லட்சுமிகாந்த் – பியாரிலால்

7. S. P. முத்துராமன்

8. பாலு மகேந்திரா

9. அப்பச்சன்

10. ஹவுஸ்புல், ஏர்போர்ட் இன்னும் பல படங்கள் உள்ளன.

மீண்டும் சந்திப்போம்…
+ நேசத்துடன்… இரா. அரங்கன்

12 October 2006

12-10-2006 - இன்றைய விஷயம் : அப்படியா… ! (சில ஆச்சர்யமான செய்திகள் )



1. இளையராஜா இசையமைத்த ஒரு படத்திற்கு தேவா பிண்ணனி இசை அமைத்திருக்கிறார். அது எந்தப் படம் ?

2. ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகமாகக் கருதப்பட்ட படம் எது ? (இந்தப் படம் வெளிவந்தது)

3. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்க இருந்த படத்தின் பெயர் என்ன ? (அந்தப் படம் எடுக்கப்படவேயில்லை)

4. அறிமுகமான படம் முதல் K. பாலசந்தரின் எல்லாப் படங்களிலும் நடித்த நடிகர் யார் ?

5. விக்கிரமன் யாருடைய உதவி இயக்குனராக இருந்து பின்பு இயக்குனரானார் ?

6. ‘உயிரே உனக்காக’ படத்தின் இசையமைப்பாளர் யார் ? (Quite Interesting if you know the answer )

7. ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தின் இயக்குனர் யார் ?

8. கமல் நடித்த ‘சதி லீலாவதி’ படத்தின் இயக்குனர் யார் ?

9. ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்திற்கும் தாம்பரத்தில் உள்ள ‘கிஷ்கிந்தா’விற்கும் இருக்கும் தொடர்பு என்ன ?

10. ‘அந்த நாள்’, ‘பேசும் படம்’, குருதிப்புனல்’ ஆகியவை தவிர தமிழில் வேறு ஏதேனும் பாடல்களே இல்லாத படம் (கள்) உண்டா ?


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/12-10-2006.html) சொடுக்கவும்...

+ நேசத்துடன்… இரா. அரங்கன்

29 September 2006

29-09-2006 – இன்றைய விஷயம் : இந்த வசனம் எந்தப் படம் ?


1. ‘இந்த உலகத்துல தோத்தா மக்குன்னு சொல்லுவாங்க… ஜெயிச்சா லக்குன்னு சொல்லுவாங்க… ‘


2. ‘அழைத்து வரவில்லை… திருத்திக் கொள்ளுங்கள்… இழுத்து வரப்பட்டிருக்கிறேன்… ‘


3. ‘ஜெயிக்கிறத்துக்கும், தோக்கறதுக்கும் காதல் ஒண்ணும் பரிட்சை இல்லைங்க… அது ஒரு ஃபீலிங்… ‘


4. ‘காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை… ஆனா… காதல் இல்லாம வாழ்க்கையே இல்லை… ‘


5. ‘நான் செஞ்சது ரைட்டுன்னு சொல்லமாட்டேன்… ஆனா நான் செஞ்சது தப்பில்லை…



6. ‘கோவமோ, சந்தோஷமோ, ஆத்திரமோ, ஆர்ப்பாட்டமோ… எதுவா இருந்தாலும் ஒரு அஞ்சி நிமிஷம் தள்ளிப் போடு… ‘


7. ‘என் ஸ்டைல், சார்ம், கிரேஸ் இதெல்லாம் பார்த்து மயங்கிடுவியோன்னு நீ பயப்படறே… ‘


8. ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்… ஆனால் வாய்தான்… ‘


9. ‘பப்பி ரொம்ப நல்ல குக்… ‘


10. ‘கேக்கறது கடன்பாக்கி… கைல துப்பாக்கியா… ?’



விடைகளுக்கு இங்கே சொடுக்கவும்...

+ நேசத்துடன்… இரா. அரங்கன்

28 September 2006

28-09-2006 – இன்றைய விஷயம் : ஒரு படம்



பத்து குறிப்புகள்… படம் என்ன என்று கண்டுபிடியுங்கள்… (அவ்வளவு சுலபம் அல்ல… )

1. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தை, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் என்பவர்கள் உண்டு.

2. சுமார் 30 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம்.

3. இந்தப் படம் ஆங்கில sub-titles கொண்டு வெளிநாடுகளிலும் வெளியிடப்பட்டது.

4. M.K. ராதா கதாநாயகனாக நடித்தார்.

5. இந்தப் படத்தின் தயாரிப்பாளரே இதன் இயக்குனரும் ஆவார்.

6. இந்தப் படத்திற்கு இசை ராஜேஸ்வர ராவ்

7. நகைச்சுவைப் பகுதிகளை N.S. கிருஷ்ணன், T.A. மதுரம் நடித்தனர்.

8. படம் வெளியான ஆண்டு – காந்தி இறந்த ஆண்டு.

9. இந்தப் படத்தில் நடித்த ஒருவர் தன்னுடைய அடுத்த படத்தில் இரட்டை வேடம் கொண்டு நடித்தார்.

10. மிகவும் பிரபலமான ‘DRUM DANCE’ இந்தப் படத்தில் உண்டு.



விடைக்கு இங்கே சொடுக்கவும்...


+ நேசத்துடன்… இரா. அரங்கன்

27 September 2006

27-09-2006 - இன்றைய விஷயம் : எழுத்தாளர் சுஜாதா


ஒரு சிறிய கேள்வி – பதில் பகுதி


1. சுஜாதாவும் பாலசந்தரும் இணைந்த படம் எது ?

2. கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் சுஜாதாவின் பங்கு என்ன ?

3. சுஜாதாவின் “இருள் வரும் நேரம்” என்ற கதை, என்ன பெயரில் படமானது ? அதன் இயக்குனர் யார் ?

4. சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது யார் ?

அ. ஷங்கர் ஆ. கவிஞர் வாலி இ. மணிரத்னம்

5. சுஜாதாவிற்கும், தற்போதைய தேர்தல் முறைக்கும் உள்ள தொடர்பு என்ன ?


6. ஜீவா இயக்கத்தில் சுஜாதா வசனம் எழுதிய படம் எது ?
அ. 12B ஆ. உள்ளம் கேட்குமே


7. திருடா திருடா படத்தில் சுஜாதாவின் பங்கு என்ன ?

8. ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் கதைத் தொகுப்பில் வரும் ‘வத்சலா’ என்ற கதாபாத்திரம் நிஜமா, கற்பனையா ?


9. சுஜாதாவும், பாரதிராஜாவும் இணைந்த படங்கள் ?


10. சுஜாதாவின் கதைகளில் வரும் ‘கணேஷ்’ யார் ?

அ. துப்பறியும் நிபுணர் ஆ. போலீஸ் அதிகாரி இ. வக்கீல்



விடைகளுக்கு இங்கே சொடுக்கவும்...



+ நேசத்துடன்… இரா. அரங்கன்

26 September 2006

இப்படிக்கூட ஆரம்பிக்கலாம்...




ஒரு குறுக்கெழுத்துப் புதிர். (CROSSWORD)

தயாரா… ?


இடமிருந்து வலம்

1. இயக்குனர் ஷங்கர் இயக்கிய படம் – தயாரித்த படம் (4,3)
4. புண்ணியம் – விக்ரம் (2)
5. நாக்ரவி நடிகை (3)
7. அர்ஜுன் நடித்த ஏழு கலர் (4)
8. நாடகம் போடும் இடம் (2)
10. அண்ணன் இயக்கி, தம்பி நடித்த படம் (2)

வலமிருந்து இடம்

9. ஒன்றும் நூறும் சமம். (3)
11. கடவுள் பெயர் – ரஜினி படம் (2)
12. ‘இது’ தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் என்று பிரஷாந்த் பாடுவார். (3,4)



மேலிருந்து கீழ்

1. இதற்குத்தான் விஜய் மரியாதை தந்தார் (5)
6. மூனு தல (5)
13. வீட்டு முகப்பு – இந்த நடிகரின் பெயரும் ____________ விஜய்தான் (5)
2. இ.அ. 23ல் வைகைப் புயல் அடிக்கடி சொல்லும் பெயர் (கொஞ்சம்
பிழையோடு) (6)
14. திமிர் பிடித்த சண்டைக்கோழி (3)
5. இப்படின்னு ஒரு காதல் (2)



கீழிருந்து மேல்

1. மீனுக்கு இன்னொரு பெயர் (3)




விடைகளுக்கு
இங்கே சொடுக்கவும்...

+ நேசத்துடன்… இரா. அரங்கன்

என்ன சொல்லப் போகிறாய்… ?


பத்து முறை விழுந்தவனை
பார்த்துச் சொன்னாள் பூமித்தாய்
ஒன்பது முறை எழுந்தவனே… !
இன்னும் ஒரு முறை
முயன்று பாரேன்… !


முயற்சி… ! இதுதான் என் அடிப்படை, அஸ்திவாரம், ஆதாரம் எல்லாமே.

சும்மா நேரத்தை வீணாக்காமல்…

வாங்க… ! சினிமா பற்றிப் பேசலாம்… !

+ நேசத்துடன்… இரா. அரங்கன்